Wednesday 22 February 2012

சட்டங்களின் சிற்பிகள்



உலகில் முதல்முதலாய்ச் சட்டங்கள் இயற்றி, வழக்குரைஞர்களை உருவாக்கி , நீதி மன்றங்களை நிறுவி , வழக்கு விசாரித்துத் தீர்ப்பு வழங்குகிற முறையை ஏற்படுத்தியவர் ரோமானியர். 

அந்த முறைதான் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இன்றளவும் அமலில் நீடிக்கிறது அது மட்டுமல்ல ; ரோமானிய சட்ட நூல்களிலிருந்து பற்பல லத்தின்  சொற்களையும் சொற்றொடர்களையும் எடுத்து உலகு பயன்படுத்துகிறது .  

அவற்றுட் சில :  

அலிபி , ஹபெயாஸ் கொர்ப்புஸ். , மலா ஃபிதே , போஸ்த் மொர்தேம் , ப்ரிமா ஃபசியே , சினே திஏ 
( alibi , habeas corpus , mala fide , post mortem , prima facie , sine die ). 

குற்றவாளி தப்பிக்கலாம் , நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்னும் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை எடுத்துச் சொன்னவர் த்ரயான் என்ற ரோமானிய சக்கரவர்த்தி . 

அவர் சொன்னார் : " ஒரு நிரபராதியைத் தண்டிப்பதைக் காட்டிலும் ஒரு குற்றவாளியைத் தப்ப விடுதல் மேலானது " 

அக் காலத்திலேயே அதிகாரத்தைத் தவறாய்ப் பயன்படுத்தல் , அரசுக்கு எதிரான சதி , பொதுப் பணம் கையாடல் , உயில் மோசடி , கள்ள நாணயம் தயாரித்தல் , பெண் சிசுக் கொலை  முதலான குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 

ரோமானிய வழக்குரைஞர்களுள் பெரும் புகழ் எய்தியவர் சிசெரோ ( Cicero ) தேர்தலில் கையூட்டுத் தந்து வென்றதாக முரேனா என்பவர்மீது தோற்றவர் ஒருவர் தொடுத்த வழக்கில் சிசெரோ முரேனாவுக்கு ஆதரவாகத் திறம்பட வாதாடி அவரை மீட்டார் . 

கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட மிலோ என்னும் பெயருடையாருக்காகவும் அவர் வாதாடியிருக்கிறார் .  

அந்த இரு வாதங்களும் ப்ரோ முரேனா ( முரேனாவுக்காக ) , ப்ரோ மிலோனே என்ற தலைப்புகளில் நூல்களாகி லத்தின் இலக்கியப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன .

2 comments:

  1. சட்டமுறை உருவாக்கம், செயல்பாடுகளின் முன்னோர் பற்றி அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  2. கருத்துரைக்கு மிக்க நன்றி .

    ReplyDelete