வட இந்தியாவில் பானிப்பட் என்ற ஒரே
இடத்தில் 3 போர்கள் நடந்ததாக வரலாறு
தெரிவிக்கிறது.
தமிழகத்தில் அவ்வாறு ஓரிடத்தில் முப்
போர் நிகழவில்லை ; ஆனால் இரு போர் நிகழ்ந்துள்ளன.
அவை நடந்த இடம் தெள்ளாறு ; திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியின் அருகில் இருக்கிறது.
முதற் போர் :
854 இல் , மதுரையிலிருந்து படை எடுத்துவந்த பாண்டியன் சீமாற சீவல்லபனைப் பல்லவ
மன்னன் நந்திவர்மன் iii
தடுத்து நிறுத்திப் போரிட்டு வென்று துரத்தினான்.
இரண்டாம் போர் :
கோப்பெருஞ்சிங்கன் என்னும்
சிற்றரசனிடம் 3 ஆம் ராசேந்திர சோழன் தோற்றுச்
சிறைப்பட்டான். ( 1231 )
பல்லவர் குலத்தில் பிறந்த ஏழிசை மோகன்
காடவராயன் என்பவன் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் ( 1133 - 1150 ) காவல் அதிகாரியாய்ப் பணி ஆற்றினான். தன் வலிமையைப் படிப் படியாய்ப்
பெருக்கிக்கொண்டு நாளடைவில் சிற்றரசன் ஆகிவிட்டான்.
அவனது வமிசத்தில் தோன்றிய
கோப்பெருஞ்சிங்கன் ( 1229 - 1278 ) சேந்தமங்கலத்திலிருந்து ( கடலூர்
மாவட்டம் ) ஆட்சி புரிந்தான் . இவன் தன் படையுடன் வந்து போரிட்டு 3ஆம் ராசராச சோழனை வென்று சிறைசெய்தான்.
செய்தி அறிந்த ராசராசனின் நண்பனும்
கன்னட ஓய்சல நாட்டு மன்னனும் ஆகிய வீரநரசிம்மன் அனுப்பிய சேனை சேந்தமங்கலத்தை
முற்றுகையிட முற்பட்டபோது கோப்பெருஞ்சிங்கன் சோழனை விடுவித்துவிட்டான்.
இவை தெள்ளாற்றுப் போர்கள்
எனப்படுகின்றன.
இதுவரை அறிந்திராத தெள்ளாற்றுப்போர்கள் பற்றி தங்கள் பதிவின் மூலமே அறிந்துகொண்டேன். மிகவும் நன்றி.
ReplyDelete