Saturday 14 April 2012

ஜூலியஸ் சீசர்




ரோம் வரலாற்றில் ஜூலியஸ் சீசருக்கு முக்கிய இடமுண்டு. 

அவர் மாவீரர் மட்டுமல்ல , எழுத்தாளருங்கூட . பிரான்சைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்ற அவர் , அதற்காகத் தாம்  நிகழ்த்திய போர்களை விவரித்து நூல் இயற்றியுள்ளார்;  அதன் தலைப்பு தே பெல்லோ கல்லிக்கோ (De Bello Gallico ) . 

உலகு முழுதும் பயன்படுகிற காலண்டரை உருவாக்கியவர் அவர்தான்;  12 மாதம் , 365 1/4 நாள் கொண்ட அது ஜூலியன்  காலண்டர் எனப்படுகிறது;  அதில் ஒரு மாதத்துக்குத் தமது பெயரை அவர் சூட்டினார்: அதுவே ஜூலை. 

4 ஆண்டுக்கு ஒரு லீப் ஆண்டு அதில் உண்டு.  

அந்தக் காலண்டர் நெடுங்காலத்துக்குப் பின்பு சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது  கிரிகோரியன் காலண்டர் என்றழைக்கப்படுகிறது. 

தாயின் வயிற்றிலிருந்து குழந்தையை எடுப்பதற்குச் செய்யும் அறுவையை ஏன் சிசேரியன் என்கிறோம்? 

அவ்வாறு பிறந்த முதல் குழந்தை சீசர்தானாம் ; அதனால் அந்தப் பெயர். 

(Caesar - caesarian )


2 comments:

  1. அறியாத தக்வல்கள் அடங்கிய
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete