( எலெக்த்ரா அவல வாழ்க்கையில் அல்லல் உற வேண்டும் என்ற தீய நோக்கத்தில்
அவளை ஒரு பரம ஏழைக்கு மணம் முடித்தாள் தாய்; எனினும் ஊருக்கு
வெளியே, குடிசையில், நல்ல மனைவியாய் வாழ்ந்தாள் அவள். ஒரு நாள் ஒரேஸ்த்தஸ் வந்து, தமக்கையுடன்
கலந்தாலோசித்து, தெய்வத்தை வழிபட எகிஸ்த்தஸ் வருவதை அறிந்து, திட்டமிட்டுக் கொன்று, தூக்கிக்
கொணர்ந்த பிணத்தை நோக்கி எலெக்த்ரா கூறியது)
என்தாயில் ஒழுக்கமுள்ள ஒரு மனைவியை
அடையலாம்
என்று கற்பனை செய்தநீ ஒருமுட்டாள்.
ஆ ! பிறனுடைய துணைவிமேல் கண்வைத்து
அவளை வசப்படுத்தி மணந்தவன்,
தனக்கு விசுவாசமாக இருப்பாள்
முதல் கணவனுக்கு விசுவாசமாய் இல்லாதவள்
என நம்பினால் அவனொரு மடையன்.
பரிதாப வாழ்வு வாழ்ந்தாய்நீ, அதை உணராமலே.
பழிகாரியை மணந்தாய் என்பது உனக்குத்
தெரியும்;
மோசக்காரன் நீ என்பது அவளுக்குத்
தெரியும்.
இருவரும் குற்றவாளிகள், ஒருவரால் மற்றவர் கெட்டீர்.
யூரிபிடீசின் எலெக்த்ரா (தொடர்ச்சி)
( க்ளித்தெம்நேஸ்த்ராவைத் தந்திரமாய்
வரச் செய்தனர். அவள் வருவது தெரிகிறது)
ஒரேஸ்தஸ் - அன்னை..நாம் என்ன
செய்யவேண்டும்? கொல்வது?
எலெக்த்ரா - தளர்கிறாயா உள்ளம் தாயைப்
பார்த்து?
ஒரேஸ்தஸ் - இல்லை, ஆனால் கொல்வதா பாலூட்டி வளர்த்தவளை?
எலெக்த்ரா - நம் தந்தையைப் படுகொலை செய்தவளை.
ஒரேஸ்தஸ்- அப்பொல்லோ, எத்தகைய தவறு இழைத்தார் உன் அருள்வாக்குக்காரர்?
எலெக்த்ரா - அப்பொல்லோ பிழை புரிந்தால் வேறு
யார் ஞானி?
ஒரேஸ்தஸ் - ஆனால் பெற்றவளைக் கொல்லச் செய்வது ,
இயற்கைக்கு மாறாக?
எலெக்த்ரா - எப்படி அது தடை யாகும் சொந்தத்
தந்தைக்குப் பழி வாங்க?
ஒரேஸ்தஸ் - தாயைக் கொன்றவன் என்ற வசை வரும் ,
நிரபராதி எனக்கு.
எலெக்த்ரா - தெய்வக் குற்றம் ஆகும், தந்தைக்கு உதவாவிட்டால்.
ஒரேஸ்தஸ்- அன்னையின் குருதிக்கு நான் விலை
கொடுக்க நேரும்.
எலெக்த்ரா - என்ன விலை தந்தைக்கு, பழி தீர்க்காவிடில்?
ஒரேஸ்தஸ் - கொல்லச் சொன்னது ஒரு பிசாசு,
கடவுளின் பெயரில்.
எலெக்த்ரா - புனித முக்காலியில் அமர்ந்தா?
ஒரேஸ்தஸ் - ஒரு நாளும் ஒப்பமாட்டேன், அந்த அருள்வாக்குக்காரர் அறம் விரும்பி என்பதை.
எலெக்த்ரா - ஆக, கோழையாக மாறுவாய் , வீரனாக நீடிக்கப்போவதில்லை.
ஒரேஸ்தஸ் (நீண்ட யோசனைக்குப் பின்பு) - அப்படியானால் சரி, எப்படிச் செய்வேன்? இவளுக்கும் அதே பொறியை வைப்பதா?
( அவள் வந்ததும் இருவரும் சேர்ந்து
மாய்க்கின்றனர்.)
No comments:
Post a Comment