தமிழகத்தின் காஞ்சிபுர மாவட்டத்தில்
வாலாஜாபாத் என்ற ஊரும் வேலூர் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை என்னும் ஊரும்
இருக்கின்றன.
வாலாஜா என்பது ஆர்க்காட்டு நவாபாய்ப்
பதவி வகித்த முகம்மதலியின் வேறு பெயர். பாரசீக மொழியில் அபாத் என்றால் ஊர் என்பது
பொருளாம்.
ஐதரபாத், சிக்கந்தரபாத், அகமதபாத் முதலியவை அபாத் என்று
முடிகின்றன.
உசேன் என்பவரின் பெயரால் அமைந்த
உசேனபாத் நாளடைவில் உசேனூர் என மருவி இப்போது ஒசூர் ஆகிவிட்டது.
(ஆதாரம்: ரா. பி. சேதுபிள்ளை இயற்றிய
ஊரும் பேரும் என்னும் நூல்.)
அபாத் என்பது இந்தியில் ஆபாத் எனப்
புழங்குகிறது. இதன் பொருள் மக்கள் வாழ்கிற என்பது.
No comments:
Post a Comment