ஊர்ப் பெயர் தாங்கிய தமிழ்ப்
பழமொழிகளுள் எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பதிகிறேன்:
1 - ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .
2 - காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது.
3 - காஞ்சிக்குப் போனால் காலாட்டிப்
பிழைக்கலாம்.
4 - தங்கச்சி தாராளம் இஞ்சிக்குடி பேராளம்.
5 - தென்காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம்.
6 - தில்லைப் பெண் எல்லை தாண்டாள்.
7 - தில்லிக்கு ராஜா ஆனாலும் தல்லிக்குப்
பிள்ளைதான்.
8 - திருநெல்வேலியான் தேர் பாரான்
திருச்செந்தூரான் கடலாடான்.
9 - காரைக்கால் ரோட்டைப் பார்
காதர்சுல்த்தான் வீட்டைப் பார்.
10 - காஞ்சியில் பிறக்க முக்தி காசியில்
இறக்க முக்தி.
11 - தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை
எடுக்கிறாள்,
தம்பி கும்பகோணத்தில் கோதானம்
செய்கிறான்.