உண்மை பேசவேண்டும் என்று அனைத்து அற
நூல்களும் போதிக்கின்றன; ஆனால் பொய் உரைக்காமல் யாரும்
வாழ்வதில்லை, வாழ முடிவதில்லை. இதை மனத்துள் கொண்ட
திருவள்ளுவர், பொய்யை இரு வகைப் படுத்தி, பிறர்க்கு நன்மை பயக்கின்ற பொய்யை வாய்மையாய்க் கொள்ளலாம் என்றார்;
ஆனால் மற்றவர்களின் நன்மையைக் கருத்தில்
கொள்ளாமல் தன்னலப் பொய்களைப் பயன்படுத்தி வாழ்க்கை நடத்தவேண்டிய கட்டாயத்தில்
உள்ளோர்க்குப் பஞ்சமில்லை.
அவர்கள்:
1 - வழக்குரைஞர்கள் - பொய் சாட்சி உருவாக்கும்
அவசியம் இவர்களுக்கு ஏற்படும்;
2 - வணிகர்கள் - வர்த்தக விளம்பரங்களில்
அண்டப் புளுகுகள், ஆகாசப் புளுகுகள் இடம்பெறக் காண்கிறோம்.
3 - தரகர்கள் - ஆயிரம் பொய் சொல்லி ஒரு
கல்யாணம் செய்யலாம் எனத் திருமணத் தரகர்கள் தமக்குச் சாதகமாய் ஒரு பழமொழியே படைத்துள்ளனர்.
உண்மையை (முழுதும் அல்லது பகுதி)க்
கூறாமல் மறைப்பதும் ஒரு வகைப் பொய்தான்; ஆயினும் அது
எல்லார்க்கும் அவ்வப்போது தேவைப்படுகிறது.
"எல்லா உண்மைகளும் சொல்லத் தக்கவை அல்ல"
என்று ஒரு பிரஞ்சுப் பழமொழி எச்சரிக்கிறது;
ஒளிக்க வேண்டிய மெய்யை அம்பலப்படுத்துவார்க்கு
நேரும் இக்கட்டை இயம்புகிறது, "யதார்த்த வாதி
வெகு ஜன விரோதி" என்னும் சமற்கிருதப் பழமொழி.
அதனால் பிறர்க்கு நல்லது நடந்தால் சரி ஐயா...
ReplyDeleteஉங்கள் கருத்து சரியே . கருத்துரைக்கு மிக்க நன்றி .
Delete