Thursday 14 March 2013

மெய்யும் பொய்யும்


 

உண்மை பேசவேண்டும் என்று அனைத்து அற நூல்களும் போதிக்கின்றன; ஆனால் பொய் உரைக்காமல் யாரும் வாழ்வதில்லை, வாழ முடிவதில்லை. இதை மனத்துள் கொண்ட திருவள்ளுவர், பொய்யை இரு வகைப் படுத்தி, பிறர்க்கு நன்மை பயக்கின்ற பொய்யை வாய்மையாய்க் கொள்ளலாம் என்றார்; ஆனால் மற்றவர்களின் நன்மையைக் கருத்தில் கொள்ளாமல் தன்னலப் பொய்களைப் பயன்படுத்தி வாழ்க்கை நடத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோர்க்குப் பஞ்சமில்லை. 

அவர்கள்: 

1 - வழக்குரைஞர்கள் - பொய் சாட்சி உருவாக்கும் அவசியம் இவர்களுக்கு ஏற்படும்; 

2 - வணிகர்கள் - வர்த்தக விளம்பரங்களில் அண்டப் புளுகுகள், ஆகாசப் புளுகுகள் இடம்பெறக் காண்கிறோம். 

3 - தரகர்கள் - ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் எனத் திருமணத் தரகர்கள் தமக்குச் சாதகமாய் ஒரு பழமொழியே படைத்துள்ளனர். 

உண்மையை (முழுதும் அல்லது பகுதி)க் கூறாமல் மறைப்பதும் ஒரு வகைப் பொய்தான்; ஆயினும் அது எல்லார்க்கும் அவ்வப்போது தேவைப்படுகிறது. 

"எல்லா உண்மைகளும் சொல்லத் தக்கவை அல்ல" என்று ஒரு பிரஞ்சுப் பழமொழி எச்சரிக்கிறது 

ஒளிக்க வேண்டிய மெய்யை அம்பலப்படுத்துவார்க்கு நேரும் இக்கட்டை இயம்புகிறது,  "யதார்த்த வாதி வெகு ஜன விரோதி" என்னும் சமற்கிருதப் பழமொழி.

2 comments:

  1. அதனால் பிறர்க்கு நல்லது நடந்தால் சரி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து சரியே . கருத்துரைக்கு மிக்க நன்றி .

      Delete