Tuesday 20 May 2014

பிழையான தகவல்கள்




1  --  சிலர்  கூறுவர்செய்தி என்று பொருளுடைய news  என்னும் ஆங்கிலச் சொல்,  north,  east,  west,  south  ஆகியவற்றின் முதல் எழுத்துகளைக் கோத்து உருவாக்கப்பட்டது எனவும் நான்கு திக்குகளிலிருந்தும் செய்திகள் வருவதால் அந்தச் சொல் மிகப் பொருத்தமானது எனவும்.

    அது ஆதாரம் அற்ற கூற்று.

  புதிய என அர்த்தம் தரும் niwe  என்னும் ஆங்கிலோ சாக்சன் மொழியின் வார்த்தையிலிருந்து உருவானது new  என்று அகராதி தெரிவிக்கிறதுஇதன் இறுதியில் சேர்ந்து news   ஆனது.

  செய்தியைக் குறிக்கிற பிரஞ்சுச் சொல்,  "நுவேல்" (nouvelle);  இதற்கும் புதிய என்பதே பொருள்.



 2 --  சதுரங்க விளையாட்டைச் சுட்டும் ஆங்கிலச் சொல் chess;   இந்த வார்த்தை எப்படி உருவாக்கப்பட்டது என்று ஒரு வார இதழில் அண்மையில் படித்தேன்அதில் எழுதப்பட்டிருந்தது:

      "சதுரங்கக் காய்களின் பெயர்கள் carts,  horses, elephants, soldiers;  இவற்றின் முதலெழுத்துகளைச் சேர்த்து chess  என்கிறோம்"

    இது தவறான தகவல்.

   1  -  காய்களுள் முக்கியமானவை ராஜாவும் ராணியும்ஆங்கிலத்தில் king,  queen;  இவற்றின் முதல் எழுத்துக்களான k -ஐயும் q - ஐயும் விட்டுவிட்டுப் பெயர் வைப்பார்களா?

    2  -  carts  முதலான நான்கு சொற்களும் எந்தக் காலத்திலும் பயன்பட்டதில்லை. சரியான பெயர்கள்,  rooks,  knights,  bishops,  pawns ஆகியவைதான்இவற்றின் எதன் முதலெழுத்தும் chess- இல் இல்லை.

   3  -  அந்த விளையாட்டின் பழைய பிரஞ்சுப் பெயர் esches ;  இதிலிருந்தே chess  என்னும் சொல் தோன்றிற்று. (இப்போது பிரஞ்சில் echecs  என்கிறார்கள்).
                                         =======================                                  

Saturday 10 May 2014

தேங்காய்




தேங்காய் - இந்தச் சொல்லின் தொடக்க வடிவம்: தெங்கங்காய். தென்னை மரத்தின் பழைய பெயர், தெங்கு. நன்றி ஒருவற்கு எனத் தொடங்கும் வாக்குண்டாம்  செய்யுளில், “தளரா வளர் தெங்கு என வருதல் காண்க.

 தெங்கு + அம் + காய் = தெங்கங்காய். அம் என்பது இரண்டு பெயர்ச் சொற்களை இணைக்கப் பயன்படுவது; சாரியை என்பார்கள்.

  வேறு காட்டுகள்:
நாற்று + அம் + கால் = நாற்றங்கால்;
ஆறு + அம் + கரை = ஆற்றங்கரை;
தென்னை + அம் + கீற்று = தென்னங்கீற்று.

  தெங்கங்காய் முற்றினால், தெங்கம்பழம். நாய் பெற்ற தெங்கம்பழம் என்னும் பழமொழியை அறிந்திருப்பீர்கள். ஒரு நாயிடம் முற்றிய தேங்காய் கிடைத்தால், அதனை அது உருட்டி விளையாடக்கூடும், பயன்படுத்தாது. தேங்காயை எவராவது எடுக்கப் போனால், குரைக்கும், கடிக்க வரும். தானும் உபயோகிக்காமல் பிறர்க்கும் ஈயாமல் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தைக் குறிப்பது அந்தப் பழமொழி.

  (“வைக்கோல் போர் நாய் என்றும் சொல்வதுண்டு: வைக்கோல் போரின் அடியில் படுத்திருக்கும் நாய் வைக்கோலைத் தின்னப்போவதில்லை; தின்ன வரும் மாட்டையும் விரட்டும்.)



 தேங்காய் என்பதற்குத் "தேங்காதே" எனவும் பொருளுண்டு. திருமணங்களில் ஏன் தேங்காய் வழங்குகிறார்கள்?  நகைச்சுவையாய் ஒரு காரணம் சொன்னார் தமிழறிஞர் அரசஞ் சண்முகனார். மணம் முடிந்துவிட்டது, போய்விடு; இங்கே தேங்காதே (தங்கிவிடாதே) என்பதை நாசுக்காய்த் தெரிவிப்பதற்குத் தேங்காய் கொடுக்கிறோம் என்றார் அவர்.

 பிஞ்சுத் தேங்காயை ளநீர்’  என்கிறோம்; இச்சொல்லை விளக்கியுள்ளார் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்: இதில் உள்ள நீர்தமிழல்ல;  இந்தியாவின் மொழிகளுள் ஒன்றான முண்டாவில், நீர் என்பது தேங்காயைக் குறிக்கும்; எனவே, இள நீர் = இளந் தேங்காய் என்பது அவரது விளக்கம்.

         (முண்டா இன மக்கள் கிழக்கிந்தியவாசிகள்)
               -------------------------------------------