Saturday 7 January 2017

வல்லவனுக்கு வல்லவன் - 2


காட்சி - 3   --   இடம்: வழக்குரைஞர் இல்லம்.

                வியாபாரி, கீய்மேத், பாத்லேன்.

   (கடைக்காரரை ஏமாற்றுவதற்குக் கணவரும் மனைவியும் தயார்)





வியாபாரி -- ஐயாவழக்குரைஞர் ஐயா!

கீய்மேத் -- எது சொல்வதாக இருந்தாலும்மெதுவாகப் பேசுங்கள்.

வியாபாரி -- கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

கீய்மேத் -- இன்னம் மெல்ல.

வியாபாரி -- எங்கே அவர்?

கீய்மேத் -- அந்தோபடுக்கையில் கிடக்கிறார், பாவம், பதினொரு வாரமாய்.

வியாபாரி --- யார்?

கீய்மேத் -- மன்னியுங்கள்நான் உரத்துப் பேசத் துணியவில்லைஅவர் பலவீனமாக இருக்கிறார்.

வியாபாரி -- யாரைப் பற்றி சொல்கிறீர்கள்?

கீய்மேத் -- பிஏர்.

வியாபாரி -- என்னது? செத்தமுன்னே வந்து துணி வாங்கவில்லையா?

கீய்மேத் -- யார்,   இவரா?

வியாபாரி --  ஒரு மணிகூட ஆகியிருக்காதுகாக்க வைக்காமல் பணத்தைக் கொடுங்கள்.

கீய்மேத் -- என்னகதையா விடுகிறீர்கள்?

வியாபாரி -- உங்களுக்கென்ன கிறுக்காஒன்பது பிரான்,  என் பணம். அவரை வரச்சொல்லுங்கள்.   

கீய்மேத் -- அவரால் முடியாதே!

வியாபாரி -- வழக்குரைஞர் பிஏர் பாத்லேன் வீடுதானே இது?

கீய்மேத் -- ஆமாம், மெல்லப் பேசுங்கள். அவர் தூங்கட்டும்.

வியாபாரி -- மெல்ல என்றால், கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போலவா
அவர் ஆறு ஓன் கம்பளித் துணி இன்று வாங்கினார்.

கீய்மேத் -- இன்றைக்காபதினொரு வாரமாய்ப் படுத்துக் கிடக்கிறார்.

வியாபாரி -- இதோ பாருங்கள்ஆறு ஓன் துணிக்குப் பணங்கொடுங்கள்.

கீய்மேத் --- யாரிடங் கொடுத்தீர்கள்?

வியாபாரி -- இவரிடந்தான்.

கீய்மேத் --- இவருக்கு எதற்குக் கம்பளி?   இவர் வெள்ளை மட்டுமே உடுத்துவார்.

வியாபாரி -- நான் அவரிடம் பேச வேண்டும்.

பாத்லேன் -- கீய்மேத், கொஞ்சம் வொய்ன் கொடு, என்னைத் தூக்கி விடு.

வியாபாரி -- அவர் குரல் கேட்கிறது.

கீய்மேத் -- ஆமாம்.

பாத்லேன் -- இங்கே வாஎதற்காக சன்னல்களைத் திறந்தாய்? போர்த்துவிடு.  இந்தக் கருப்பு மனிதர்களைப் போகச் சொல். தடதடாமொற மொற.   அவர்களை என்னிடம் அழைத்து வாஅழைத்து வா.

கீய்மேத் -- என்ன இதுஏன் இப்படி அசைகிறீர்கள்?

பாத்லேன் -- உனக்குப்  புரியாதுஅதோ ஓரு கருப்புப் பாதிரியார் பறக்கிறார். அவருக்கு ஒரு அங்கி கொடு. பூனை, பூனை! எவ்வளவு வேகமாக ஏறுகிறது!

கீய்மேத் --- என்னென்னவோ உளறுகிறீர்கள்.

பாத்லேன் -- இந்த மருத்துவர் என்னைக் கொல்லுகிறார்கஷாயத்தைக் குடிக்கச் செய்து.

கீய்மேத்  - ஐயா,   வந்து பாருங்கள்எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று.

வியாபாரி - உண்மையாகவே நோயாளியா? இப்போதுதானே 
கடைத்தெருவிலிருந்து வந்தார்!

கீய்மேத் --- கடைத்தெருவிலிருந்தா?

வியாபாரி -- பின்னேஐயா, பிஏர்,   என் துணிக்குப் பணங் கொடுங்கள்.

பாத்லேன் -- வாருங்கள். இரண்டு மாத்திரைகல்லைவிடக் கெட்டி. தின்றேன்மீண்டும் எனீமா எடுக்க வேண்டுமா?

வியாபாரி --- எனக்கென்ன தெரியும்? என் பிரச்சினையா அது? எனக்கு வேண்டியது ஒன்பது பிரான் அல்லது மூன்று வெள்ளி.

பாத்லேன் -- மூன்று கருப்பு உருண்டைகளையும் மாத்திரை என்றா சொல்கிறீர்கள்? பல்லையே ஆட்டங்காணச் செய்துவிட்டன. கர்த்தரே! இனிமேல் அதைத் தராதீர்கள். என்ன குமட்டல்! அதைவிடக் கசப்பு வேறில்லை.

வியாபாரி -- என்னுடைய ஒன்பது பிரான் கொடுக்கவில்லை.

பாத்லேன் --- எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறார்! தூக்கில் போட வேண்டும்!

வியாபாரி --- பணம் அல்லது துணி.

பாத்லேன் --- சிறுநீரைப் பாருங்கள்அது சொல்லவில்லையாநான் செத்துக்கொண்டு இருக்கிறேன் என்று?

கீய்மேத் --- போங்கள் ஐயா! அவரைச் சங்கடப்படுத்தாதீர்கள்.

வியாபாரி --- ஆறு ஓன்! அதை நான் இழப்பதாசொல்லுங்கள்,   மனசாட்சிப்படி.

கீய்மேத் --- ஐயோ! இவ்வளவு தொல்லைப்படுத்துவதாஇந்த அளவு கல்மனமா? நீங்கள் டாக்டர் என்று அவர் நினைத்துக்கொண்டிருப்பதைத் தெளிவாகப் பார்க்கிறீர்கள். பதினொரு வாரம்தொடர்ச்சியாய், படுக்கையில்!

வியாபாரி -- தெய்வமே! எப்படி இந்த நோய் வந்தது என்பது புரியவில்லை. இன்றைக்கு வந்து துணி வாங்கினாரே!

கீய்மேத் --- ஐயோமாதாவேஉங்களுக்கு ஞாபகம் சரியில்லை. என்னைக்  கேட்டால் நீங்கள் போய் ஓய்வெடுங்கள் என்பேன். உங்களை இங்கே பார்த்து நிறைய பேர் வதந்தி பரப்பக்கூடும். தயவு செய்து வெளியே போங்கள். மருத்துவர் வருகிற நேரம்.

வியாபாரி --- யார் எதைப் பரப்பினாலும் எனக்குக் கவலையில்லை
ஏனென்றால் என் மனம் தூய்மையானது. சரி, வாத்துக்கறி அடுப்பில் இருக்கிறதா?

கீய்மேத் -- ஆகா! என்ன அருமையான கேள்வி! நோயாளி உணவா அதுவீட்டுக்குப் போய்த் தின்னுங்கள்வாத்து!

(கடைக்காரர் போகிறார். அவருக்கு ஒரே குழப்பம்: துணி வாங்கியவர் இவர்தானா அல்லது வேறு ஆளா?)

                                      \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
(படம் உதவி - இணையம்)




8 comments:

  1. வல்லவனுக்கு வல்லவன்-2 என்ற நாடகக் காட்சிகள் நல்லதொரு நகைச்சுவையுடன் நகர்ந்து முடிந்துள்ளது. பாராட்டுகள்.

    இந்த நாடகம் மேலும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் + ஆவலுடன் .....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுரைக்கு மிக்க நன்றி .

      Delete
  2. உனக்கும் பெப்பே என்னும் கதை நினைவுக்கு வந்தது

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி . அந்தப் பழமொழி இந் நாடகம் பயின்ற புதுச்சேரிவாசிகளால் உருவாக்கப்பட்டதுதான் .

      Delete
  3. Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .

      Delete
  4. சாமர்த்தியசாலி தான். ரசிக்க வைக்கும் நாடகம். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டியமைக்கு மிகுந்த நன்றி .

      Delete